எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

மதுரை,
தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம் என்று கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார்.
மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதற்கு பின்னர் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவரின் அரசியல் வாரிசு மூக்கையா தேவரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் எடப்பாடியார் ஆணைக்கிணங்க அவருக்கு புகழ் சேரும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உசிலம்பட்டியில் தேவர் சிலைக்கு அருகே மூக்கையா தேவர் சிலை அமைக்க அரசாணை கொடுத்தவர் எடப்பாடியார் ஆவார்.பெருங்காமநல்லூர் பகுதியில் உள்ள தியாகிகளுக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மணிமண்டபத்தை உருவாக்கி தந்தவர் எடப்பாடியார்.
அதேபோல் மூக்கையா தேவரின் எண்ணத்தை நினைவாக்கும் வகையில் 58 கால்வாய் திட்டத்திற்கு மராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று முறை சோதனை ஓட்டத்தை நடத்தியவர் எடப்பாடியார். தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியார். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம்.
இவ்வாறு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.