தற்போதைய செய்திகள்

கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா – எட்டயபுரத்தில் 5000 பேர்களுக்கு அன்னதானம்

தூத்துக்குடி

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு எட்டையாபுரம் நகர செயலாளர் ச.ராஜ்குமார் ஏற்பாட்டில் 5000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி ச.சுப்புலட்சுமி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் எட்டையாபுரம் நகரச் செயலாளர் ச.ராஜகுமார் ஏற்பாட்டில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன். விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ். புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி. கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஒன்றிய அம்மா பேரவைசெயலாளர் சாமிராஜ்,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருக லட்சுமி,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளரும் கழக பேச்சாளருமான பெருமாள்சாமி,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் சாந்தி,எட்டையாபுரம் அவைத்தலைவர் சேனா கணபதி,7.வது வார்டு செயலாளர் ரத்ணா,உட்பட கழகத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.