தற்போதைய செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம் கடம்பூர் மலைப்பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம், குத்தியாலத்தூர் ஊராட்சி 15-வது நிதிக்குழு சார்பாக ரூ.16 லட்சம் மதிப்பில் அத்திசிவன் தொட்டி பகுதியில் வடிகால் அமைக்கும் பணி, பசுவநாபுரம் பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி,

கரலியம் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, கானக்குந்தூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, அட்டணை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, காடகநெல்லி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, பசுவானபுரம் பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி,

இருட்டியம் பாளையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, குன்றி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,

ஏலஞ்சி, குருந்தூர் பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி என ரூ.2 கோடி மதிப்பிலான பணிகளை கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.