அரசு மருத்துவமனையில் தி.மு.க. செயலாளர் தகராறு -விடியல் அரசின் புதிய விடியல் இது தானோ என்று மக்கள் வேதனை

சிவகங்கை,
காரைக்குடி அருகே கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் தகராறு செய்து செவிலியரை தரக்குறைவாக திட்டியதோடு அங்கிருந்து பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார் ஒன்றிய தி.மு.க. செயலாளர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் உலகப்பன். இவர் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க துணை செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த 4-ம்தேதி காலில் ஏற்பட்ட காயத்திணு்னு சிகிச்சை பெற கானாடுகாத்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் காலை மாலை இருவேளையும் ஆண்டிபயாட்டிக் ஊசி மூலம் மருந்து செலுத்த வேண்டும். இதற்காக மருத்துவமனையில் தங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் மருத்துவமனையில் தங்காமல் ஆளுங்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்து கொண்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக பதிவு செய்து உள்ளார் உலகப்பன். அவர் காலை மாலை இருவேளையும் வீட்டில் இருந்து வந்து ஆண்டிபயாட்டிக் ஊசி செலுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில் காலை 8 மணிக்கு போட்டுகொள்ள வேண்டிய ஊசியை போடய இவர் காலை 11 மணிக்கு தாமதமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார் உலகப்பன். அப்போது அவர் செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.
இதை கண்ட செவிலியர் ஆதிலெட்சுமி, காலை 8 மணிக்கு போட வேண்டிய ஊசிக்கு 11 மணிக்கு வந்துள்ளீர்கள். செல்போனில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி ஊசி போடுவது என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த உலகப்பன் மருத்துவமனையில் செவிலியர் ஆதிலெட்சுமியை தரக்குறைவாகவும், ஆபாச வார்த்தைகளாலும் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
மேலும் அங்கிருந்த மருத்துவ பொருட்களையும், நாற்காலிகளையும் கீழே தள்ளி சேதப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வினர் தங்கள் அதிகாரத்தை பிரியாணி கடை, நகைக்கடை, ஷாப்பிங் மால் என தாக்குதல் நடந்தி வந்த நிலையில் இப்போது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் செவிலியர்களையும் தாக்க தொடங்கி விட்டனர். இது விடியல் அரசின் புதிய விடியலோ என்று மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.