ராமநாதபுரம்

எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட ஒட்டுமொத்த மகளிர் அணி தீர்மானம்

மதுரை,
அம்மாவைப்போல் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்த எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று கழக மகளிர் இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஒட்டுமொத்த மகளிர் அணி திரண்டு தீர்மானம் நிறைவேற்றினர்

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்த இயக்கத்தில் ஜாதி, மதம் என்று வேறுபாடு இல்லாமல் என்ற ஒற்றைக்கருத்துடன் வாழ்ந்து வரும் நம்மை சில தீய சக்திகள் ஜாதி , மதம் என்று பிரிவினை தூண்டி வருகிறது. அது ஒரு போதும் நடக்காது. இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து தான் போன வரலாறு உண்டு.

அது மட்டுமில்லாமல் தற்போது உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கவும், இந்த இயக்கத்தை வலுவாகவும், துடிப்பாகவும் கொண்டு செல்ல ஒற்றை தலைமையால் தான் முடியும். அந்த ஒற்றை தலைமைக்கு அம்மா வழியில் பெண் சமுதாயத்தை காத்து வரும் எடப்பாடியார் தான் வர வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஒட்டுமொத்த மகளிர் அணியினர் முடிவெடுத்து உள்ளோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.