தர்மபுரி

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் -தருமபுரி அருகே பொதுமக்கள் பீதி

தருமபுரி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காரிமங்கலம் அருகே நேற்றுமுன்தினம் முதலிப்பட்டி கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் உணவு, தண்ணீர் தேடி 20 வயது கொண்ட இரண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானை என 3 காட்டு யானைகள், நஞ்சப்பன் என்பவரின் கரும்புதோட்டத்திற்குள் வந்தது. சத்தம் கேட்டு அங்கு சென்ற நஞ்சப்பன் கரும்பு தோட்டத்தில் யானைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காட்டுயானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்தது குறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் அப்பகுயில் முகாமிட்டு கரும்பு தோட்டத்தை நாசம் செய்யும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதையாடுத்து அண்ணாமலை காப்புக்காடு பகுதிகளுக்கு மூன்று காட்டு யானைகளும் விரட்டி அடிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.