தற்போதைய செய்திகள் மற்றவை

அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

தூத்துக்குடி

ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ உறுதியுடன் கூறி உள்ளார்.

கழக அமைப்பு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எட்டயபுரம் நகர கழக செயலாளர் ராஜ்குமார் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.       

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:-

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழகம் ராணுவ கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தந்தவரும், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,

மக்கள் விரும்பி போற்றும் மாபெரும் தலைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.