சிறப்பு செய்திகள்

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

சென்னை,

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி மு்ர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு,இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள,பழங்குடி இனத்தவரின் பிரதிநிதி திரவுபதி முர்முவுக்கு அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,தமிழக மக்கள் சார்பிலும்,எனது சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.