பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும் -மாநகராட்சி ஆணையரிடம் கழக மாமன்ற உறுப்பினர்கள் மனு

கோவை
கோவை மாநகராட்சி 38-வது வார்டில் பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் கழக மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா சந்திரசேகர், ஆர்.பிரபாகரன், கோவை புதூர் ரமேஷ் ஆகியோர் மனு அளித்தனர்
கோவை மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தரக்கோரி 38-வது வார்டு கழக மாமன்ற உறுப்பினர் எஸ்.ஷர்மிளா சந்திரசேகர் மற்றும் கழக மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.பிரபாகரன், கோவை புதூர் ரமேஷ் ஆகியோர் கோவை மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாநகராட்சி 38-வது வார்டில் பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே மேம்படுத்தி தர வேண்டும்.
மேலும் 38-வது வார்டுக்குட்பட்ட ஓணப்பாளையம், பொம்மணம்பாளையம், கல்வீரம்பாளையம், அருண் நகர், ஐஓபி காலனி, நல்லாகவுண்டர் விதி, பொங்காளி அம்மன் கோயில் வீதி மற்றும் பொங்காளி போயர் வீதி, எம்.ஜி.ஆர் வீதி, லட்சுமி நகர், பாலாஜி நகர், காளிதாஸ் நகர்,
இந்திரா நகர், க்யூரியோ கார்டன், குருசாமி நகர், பட்டியண்ணன் நகர், நாராயணசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் கான்கிரீட் ரோடு, மழை நீர் வடிகால், சிறு பாலம், புதிய மின்விளக்கு, மூடு பலகை, குடிநீர் குழாய் கசிவுகள், திருகு அடைப்பான், சாலை வசதி, வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் மறு சீரமைப்பு பணிகளை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.