வெள்ளை அறிக்கை வெளியிட முன் வருவீர்களா?ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை,
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதை பொருட்களால் பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், போதை பொருள் கடத்தல் வழக்கில், குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட விட முன் வருவீர்களா என்று ஸ்டாலினுக்கு. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவேங்கடம் அருகே வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ராணுவ வீரர் வினோத்குமார் உயிரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது உடலுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது வினோத்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த கடந்த 3 தினங்களுக்கு முன்பாக, வைகை ஆற்றில் 6 பேர் குளிக்க சென்றனர். இதில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டு, இருவர் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் ஒருவர் உடலை மீட்கப்பட்டது.
ராணுவ வீரர் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வைகை ஆற்றில் வரும் தண்ணீரை குறைத்தால், எளிதாக மீட்கலாம் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் தண்ணீரின் அளவை குறைத்தார்.
இதில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு இணையாக உருவாக்கப்பட்ட, தமிழக பேரிடர் மீட்பு படை உடலை கண்டெடுத்தது. ஏற்கனவே பலமுறை அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார், இதுபோன்ற காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். யாரையும் குளிக்க அனுமதிக்க கூடாது. தடுப்பு வேலி அமைத்திட வேண்டும் கூறினார். இதை செய்திருந்தால் இதுபோன்ற துயரமான சம்பவம் நிகழ்ந்திருக்காது.
போதை ஒழிப்பு குறித்து கலைவாணர் அரங்கத்தில் ஆய்வுகூட்டத்தை முதலமைச்சர் நடத்தினார். தமிழகத்திலே ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இதில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, காத்து இருக்கின்றனர். இவர்கள் மனம் அழுத்தத்தால், குடும்ப சுமையால், கூடா நட்பால் போதைப்பொருட்களுக்கு அடிமையாக வருகின்றனர்.
ஏற்கனவே எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியார், திமுக ஆட்சி அமைந்த 5-வது மாதத்திலே, தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து சட்டமன்றத்திலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்ற சம்பவங்கள் போதைப்பொருட்களால் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் பேசிய வார்த்தை அழகாக உள்ளது. ஆனால், செயல்பாட்டில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதை பொருள் குறித்து முதலமைச்சர், காவல்துறைக்கு உத்தரவிட்டாலே போதும் ஒரே நாளில் வேட்டையாடி தடுத்து நிறுத்த முடியும்.
இது குறித்து விழிப்புணர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார். இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஏன் டாஸ்மாக் கடையில் கூட இது குறித்து விழிப்புணர்வு எழுதி வைத்திருப்பார்கள். விழிப்புணர்வில் சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது கேலின்சுத்தாக இருக்கிறது.
சமூக அக்கறையோடு அரசு இதில் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி வாசல்களில் போதை பொருள் விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக குற்றம் எழுந்து வருகிறது,
இந்த போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க முன்வர வேண்டும், அதேபோல் போதைப்பொருள் விற்பனை செய்பவரின் எத்தனை பேர் சொத்துக்கள் முடக்கப்பட்டது என்பதை வெள்ள அறிக்கை வெளியிட முதலமைச்சர் முன்வர வேண்டும்.
தமிழகத்தில் ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளதில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் போதை பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும், குறிப்பாக போக்சோ வழக்கில் கைதானவர்களும்,
கூட்டு பலாத்காரம் வழக்கில் கைதானவர்களும் போதை மருந்து உட் கொண்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். ஆகவே தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை இளைஞர்களுக்கு உருவாக்கும் வகையில் போதை மருந்து தடுப்பதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஏற்கனவே மதுரையில் கனமழையால் உயிரிழந்த நான்கு குடும்பத்திற்கு இதுவரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை. தற்போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ராணுவ வீரர் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது.
ஆகவே இருவரின் குடும்ப சூழ்நிலை கருதி உயிரிழந்த இரண்டு குடும்பங்களுக்கும், தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.