சிறப்பு செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பாரிவாக்கம் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

2021ம் ஆண்டு தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றது. எதிர் வருகின்ற எந்த தேர்தல் வந்தாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். ஏன் என்று சொன்னால் மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் இரண்டு வருடம் வேலையில்லாமலும் வருமானம் இல்லாமலும் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் மீது சுமையை சுமத்துகின்ற விதமாக இந்த மின் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு பொதுமக்களே இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

இந்த திமுக அரசு ஏன் இப்படி ஏழை எளிய மக்கள் மீது வரியை வாரி சுமத்துகின்றன. ஓட்டு போட்ட மக்களுக்கு அன்பளிப்பாக இந்த தி.மு.க ஸ்டாலின் அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு வரியை உயர்த்தி பரிசாக வழங்கியுள்ளது. மக்கள் எதை கேட்டாலும் செய்யவில்லை செய்யவில்லை என்று சொல்லும் அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.

இவ்வாறு கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.