தற்போதைய செய்திகள்

தேசிய கொடியை தனது காலணி அருகே வைத்திருந்த காணொலி-சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஊராட்சி அலுவலகம் அருகே சுதந்திர தின நாள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அங்கு வந்திருந்தவர்களின் ஒரு பெண்மணி தேசிய கொடியை தனது காலணி அருகே வைத்திருந்த காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மிகவும் மதிக்கத்தக்க நமது தேசிய கொடியை தரையில் வைப்பதே தவறாகும். இந்நிலையில் தேசிய கொடியை காலணியில் உரசப்படும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் இச்சம்பவம் நடைபெற்றது பெரும் வேதனை அளிக்கிறது.

தேசிய கொடியை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்காததும் வருத்தம் அளிக்கிறது. அங்கிருந்த அரசு துறையை சார்ந்தவர்கள் இதனை கவனிக்காததும் வேதனை அளிக்கிறது. இதற்கு யார் முழு பொறுப்பாவார்கள்?” என்றனர்.