தற்போதைய செய்திகள்

வேப்பனஹள்ளி தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி

முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தொகுதிக்கு ட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னார்லதொட்டி, நெரிகம், பண்ணபள்ளி, அத்திமுகம் ஊராட்சிகளுக்கு நேரில் சென்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் , குடிநீர் தொட்டி, கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அங்கு தண்ணீர் தட்டுபாடு நிலவும் பகுதிகளில் மின் மோட்டார், ஆழ்துளை கிணறு, மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பின்னர் பண்ணபள்ளி பகுதியில் உள்ள ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி வீணாவதை தடுக்க அருகில் கால்வாய் மூலமாக கொண்டு சென்று தண்ணீர் சேமிக்கவும், கரைகளை பலப்படுத்தி நீர் கசிவை தடுக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் அப்போது கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கவுன்சிலருமான பாபு என்கின்ற வெங்கடாசலம், துணை செயலாளர் சின்னஅப்பையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாரதி சுரேஷ், நஞ்சை ரோடு, மாது, நாகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் என உடன் இருந்தனர்.