வால்பாறையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டி.கே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது
கோவை,
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த தினக்கூலி ரூ.425.40 பைசாவை உடனே வழங்க வழியிறுத்தி வால்பாறையில் நகர கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.கே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தினசரி பெற்று வரும் கூலி மிக குறைந்த கூலி என்பதால் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி வழிகாட்டுதலின் படி சட்டமன்ற உறுப்பினர் டிகே.அமுல்கந்தசாமி தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ரூ.425.40 பைசா வழங்க வேண்டுமென உத்தரவிட்டது
ஆனால் கடந்த ஒரு வருடமாகியும் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளானார்கள். இந்நிலையில் ரூ.395 தினக்கூலி என ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தியது தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதை கண்டித்தும் அரசு அறிவித்த சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் தொழில் வரியை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அரசு அறிவித்த சம்பளத்தை தொழிலாளர்களுக்கும் வழங்க கோரியும் வால்பாறை காந்தி சிலை அருகே நகர கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழக இளைஞர் அணி துணை செயலாளரும், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.அமுல்கந்தசாமி தலைமையில் நடந்தது.