எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

கோவை,
கோவை வந்த எடப்பாடியாருக்கு விமான நிலையம் முதல் சின்னியம்பாளையம் வரை பல்லாயிரக்கண்கில் தொண்டர்கள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் கோவை விமான நிலையத்திலிருந்து சின்னியம்பாளையம் வரை வழியெங்கும் ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக விமான நிலையத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பூங்கொத்து வழங்கி முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியாரை வரவேற்றார். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் செந்தில் பி.கார்த்திகேயன்- கிருபாலினி இல்ல விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த எடப்பாடியாருக்கு கோவை விமான நிலையத்திலிருந்து சித்ரா கார்னர், கேஎம்சிஎச் மருத்துவமனை முன்பு, கோல்டு வின்ஸ் ஆர்ஜி.புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் சின்னியம்பாளையம் வரை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு சால்வை, பூங்கொத்து வழங்கியும், மலர் தூவியும் எடப்பாடியாரை உற்சாக வரவேற்றனர்.
வரவேற்பின் போது கேரள செண்டை மேளம், மேளதாளம் நாதஸ்வரம், ஒயிலாட்டம் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, செ.தாமோதரன் எம்.எல்.ஏ, கழக இளைஞர் அணி துணை செயலாளர் டிகே.அமுல் கந்தசாமி எம்எல்ஏ, விபி.கந்தசாமி எம்.எல்.ஏ, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ, கோ ஆஃப் டெக்ஸ் வாரியத்தலைவர் ஏ.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு க.அசோகன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர் சந்திரசேகர், கழக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உட்பட கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட மாவட்ட கழக நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், சார்பில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர்.