சிறப்பு செய்திகள்

மாமன்னர் பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை -முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

மாமன்னர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளையொட்டி நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளான நேற்று காலை தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவனுடைய திருஉருவ சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்,

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ,

கழக அமைப்பு செயலாளர் வி.கருப்பசாமி பாண்டியன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், கழக அமைப்பு செயலாளர்களான சுதா கே.பரமசிவன், ஆர்.முருகையாபாண்டியன், என்.சின்னத்துரை, பி.ஜி.ராஜேந்திரன், ஏ.கே.சீனிவாசன்,

கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் வி.முத்தையா, கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், கழக மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை என்.கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சி.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாமன்னர் பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்திய இந்நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை என்.கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சி.கிருஷ்ணமுரளி ஆகியோர் இணைந்து, மிக சிறப்பான முறையில் செய்திருந்தனர்.