தற்போதைய செய்திகள்

ரூ.16 ஆயிரம் உரிமைத்தொகை எப்போது வழங்குவீர்கள்- விடியா தி.மு.க. அரசிடம் குடும்ப தலைவிகள் கேட்கிறார்கள்

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

சேலம், செப். 3-

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினர். இப்போது 16 மாதங்கள் ஆகிறது. இந்த 16 ஆயிரம் ரூபாய் எப்போது வழங்குவீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சேலம் புறநகர் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயோத்தியாபட்டணம் அருநூத்துத்துமலை பகுதியில் கழகத்தின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டும் மழையிலும் கழக கொடிகளை சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா ஆகியோர் கொடியேற்றி வைத்து பேசினர்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு அயோத்தியாபட்டணம் ஒன்றிய கழக செயலாளர் ஏ.பி.மணி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேசியதாவது:-


அருதூத்துமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் அம்மா அவர்கள் ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார் சாலை மின்சார வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது விடியா தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு எந்த விதமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் அருநூத்துமலையிலிருந்து மஞ்சவாடி கணவாய் வரை ரூ.10 கோடியில் வன பகுதிசாலை அமைக்கும் திட்டம் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம் வனத்துறை அனுமதி பெற்றுள்ளது அந்த திட்டத்தை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதையாவது நிறைவேற்றி இந்த மலைவாழ் மக்கள் நலன் பெற உதவிட வேண்டும்.

தேர்தலின் போது தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள், உருவாக்குவது கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு தற்பொழுது இவர்கள் பெயர் வைத்து வருகிறார்கள்.

மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதை செய்ய வேண்டியது அரசின் கடமை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார். இப்போது 16 மாதங்கள் ஆகிறது. இந்த 16 ஆயிரம் ரூபாய் எப்போது வழங்குவார்கள் என பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அம்மா அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, இந்த தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் கழகத்தினர் மட்டுமே பயன்பெற்றார்களா, அனைத்து தரப்பினரும் பயன்பெற்றார்கள், இந்த நல்ல திட்டத்தை நிறுத்தியது ஏழை மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.