தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

நாமக்கல்,

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறி உள்ளார்.

ஜூலை 11-ம்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று கழகத்திற்கு சாதகமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்ததையொட்டி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், குமாரபாளையம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதன் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், குமாரபாளையம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.