வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு கழகம் சார்பில் மாலையணிவிப்பு-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

சென்னை,
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி ஓட்டப்பிடாரத்தில் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத்தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்த நாளான 5.9.2022 – திங்கட்கிழமையன்று காலை 10 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ,
கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் எஸ்.சரவணபெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.