வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை-முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை,
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்த, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 151-வது பிறந்த நாளான நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சார்பில்,
கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், கழக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் இணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர். கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.
இவ்வாறு தலைமைக்கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.