மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி

திருவள்ளூர்
விடியா ஆட்சியை நம்பி விடியலை தேடாதீர்கள். மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார் எடப்பாடியார் என்று பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.மணிமாறன் கூறி உள்ளார்.
ஜூலை 11ம்தேதி அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையொட்டி பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் பூந்தமல்லி ஒன்றிய அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் நர்மதா ராஜசேகரன்,பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் யு.ராகேஷ், ஒன்றிய பொருளாளர் டி.சரவணன், மாவட்ட பிரதிநிதி கே.ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி எம்.கருணாநிதி, கிளை செயலாளர் எம்.வரதன், நசரத்பேட்டை கிளைச் செயலாளர் என்.எஸ்.நாகரத்தினம், ஒன்றிய பிரதிநிதி கே.ஜெய்சங்கர், கழக நிர்வாகிகள் எம்.கோபால், எம்.பி.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் அதற்கு சான்றாக இன்றைய தினம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. ஏனென்றால் மறைந்தும் மறையாமலும் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்கள் நீதிபதியின் மனதிலே புகுந்து நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
என்பதை நாடே இன்றைக்கு கொண்டாடிகொண்டிருக்கின்றது. அதேபோல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி மக்களும், கழக நிர்வாகிகளும் கொண்டாடு கொண்டிருக்கின்றோம்.
இது எதை காட்டுகிறது என்றால் காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் என்பது போல் இந்த தமிழ் இனத்திற்கும், தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லாத ஒருவர் அவருடைய திரைப்படத்தில் பாடிய பாடல்.
இந்த பாடல் வரிகள் போல தான் உதவாத ஓபிஎஸ்சும், ஒன்றரை கோடி தொண்டர்களின் ரத்தத்தை பிழிந்து எடுத்து குடித்த சசிகலாவும், சசிகலாவுக்கு உறுதுணையாக இருந்த டிடிவி தினகரனும் மூவரும் போவது போல என்பதை தான் காட்டுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி கருணாநிதியின் மகன் ஸ்டாலின் விடியல் தருவோம் என்று மாயாஜால வார்த்தைகளை கூறியதால் தமிழக மக்கள் நம்பி ஏமாந்து இன்று விடியா ஆட்சிக்கு எதிராகவே போராடுகிறார்கள்.
நாங்கள் கூறுகிறோம். விடியா ஆட்சியை நம்பி விடியலை தேடாதீர்கள். மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார் எடப்பாடியார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தெய்வங்களாக இருந்து கழகத்தை காத்தார்களோ, அதேபோல் தான் எடப்பாடியாரும் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தமிழக மக்களையும் காப்பார்.
வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும், அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழல் ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகு தூரம் இல்லை. எடப்பாடியார் முதல்வராக வந்து நல்லாட்சி தருவார்.
இவ்வாறு பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.மணிமாறன் கூறினார்.