தற்போதைய செய்திகள்

குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. உறுதி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேவர் பிளாக் சாலை வசதி, குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தருவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து அதை திறந்து வைத்தார்.

அப்போது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மருத்துவமனையை சுற்றி பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும், பிறந்த குழந்தைகளை பாதுகாக்கக்கூடிய பெட்டக வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டனர்,

உடனடியாக மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து செய்து தருவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நீலகண்டன், கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன்., மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர். ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி.எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் உட்பட ஏராளமானேர் உடனிருந்தனர்.