தற்போதைய செய்திகள்

மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவு

சென்னை

மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில், அவரின் சேவைகளை நினைவு கூர்வதோடு, அவரை போற்றும் விதமாக கடைபிடிக்கப்படும் ஆசிரியர் தினத்தில், மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.