செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் புகழை போற்றி வணங்குகிறேன்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு
சென்னை,
நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, உயிருள்ளவரை தேசத்திற்காக மக்களின் உரிமைக்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய தியாகத்தினால் சுதந்திர வேட்கையை அனைவரது நெஞ்சங்களிலும் விதைத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு சென்னை, பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி , மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனாரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து எழுத்தாலும், பேச்சாலும் போராடியதுடன், நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, உயிருள்ளவரை தேசத்திற்காக மக்களின் உரிமைக்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.