சிறப்பு செய்திகள்

இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடியார்

வழியெங்கும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

சென்னை

இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, 8.9.2022 – வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக்கழகம் – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக்கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத்தலைவர்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கழக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தலைமைக்கழகம் வருகை தரும் எடப்பாடியாருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்க கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.