தற்போதைய செய்திகள்

பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை

மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கடும் தாக்கு

சென்னை, செப். 26-
பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கூறி உள்ளார்.

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சைதாப்பேட்டை ஜோன்ஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு சைதாப்பேட்டை மேற்கு பகுதி கழக செயலாளர் சைதை எம்.சுகுமார் தலைமை தாங்கினார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி முன்னிலை வகித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் எஸ்.எம்.ஷேக் அலி, ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், கோ.சாமிநாதன், என்.எஸ்.மோகன், சோ.கடும்பாடி, பூங்கா பி.பார்த்திபன், ஆர்.ஜெயப்பிரதா, என்.மச்சரேகை, கே.ஜெகநாதன், கு.செல்வநாயகம், சைதை வி.சந்துரு, பி.விஷ்ணுபிரியா, சி.சுகுணா, கே.எம்.எஸ்.அன்புசெல்வன், ஈகை பி.சுந்தர், ஓவியர் டி.கண்ணன், எஸ்.உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.கதிர்முருகன், எஸ்.எம்.சரவணன், ஏ.சோமசங்கரன், டி.யாதவராமன், எல்.கிருபானந்தஜோதி, கே.எஸ்.மனோகரன், ஏ.ஆர்.இனியன், பிடிசி எஸ்.செல்வம், என்.ஆர்.ஜோசப், ஏ.சண்முகம், ந.பாஸ்கரன், வாழைத்தோப்பு டி.பிரபாகரன், சைதை ஏ.பாஸ்கர், எம்.சி.சசிக்குமார், ஈகை ஆர்.குமார்,எம்.வசந்தகுமார், போர் எம்.ரவி, கோட்டூர் ஆர்.சீதாராமன், கோட்டூர் எஸ்.மூர்த்தி, கிண்டி டி.கணபதி, எஸ்.எல்.கன்னியப்பன், ஏ.தனசேகரன், கராத்தே சி.மகேஷ், ஏ.ராமமூர்த்தி, பி.காசி, டி.கோவிந்தன், எஸ்.பி.பழனி, எஸ்.ஜெயசேகர், எஸ்.பி.பழனி, ஏ.அண்ணாமலை, ஏ.குட்டி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி பேசியதாவது:-

அம்மா ஆட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி மிதிவண்டி, சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
திருமண வயதில் உள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அம்மா அவர்கள் செயல்படுத்தினார். எடப்பாடியார் செயல்படுத்திய குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டால் தண்ணீருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வகையில் 15 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தவர் எடப்பாடியார்.

முன்பு எல்லாம் மின்கம்பிகளை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இப்போது தி.மு.க. அரசின் மின் கட்டணத்தை கேட்டவுடன் ஷாக் அடிக்கிறது. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், அதன்பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் வி.ஆர்.திருநாராயணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆளுர் அப்துல் ஜலீல், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, ஏ.பழனி, வி.வி.சுரேஷ், எஸ்.பத்மாவதி, எஸ்.மணிகண்டன், வி.சத்தியநாராயணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைதை வி.சந்துரு, டி.எஸ்.செந்தில்குமார், பி.பூவண்ணன், சென்னை என்.சதிஷ், சைதை வி.பாலாஜி, சாரதி நகர் ஜி.அப்பு ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் என்.ஆர்.ஜோசப், ஏ.பி.சண்முகம் ஆகியோர் நன்றி கூறினர்.