சிறப்பு செய்திகள்

மீண்டும் கழக ஆட்சி மலர இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன்

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்து உள்ளார்.

இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலின் போது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு தந்து, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த தி.மு.க, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

“எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்’’ என்று சூளுரைத்த நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.

கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.