சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து எழுச்சி உரையாற்றுகிறார் எடப்பாடியார்

மதுரை

தென் மாவட்டங்களில் உள்ள கழக தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று 29-ந்தேதி காலை 9 மணிக்கு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த இரு பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்பதற்காக கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வருகிறார்.பின்னர் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு காலை 7 மணிக்கு வந்தடைகிறார்.

மதுரை விமான நிலையத்தில் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,

கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கில் திரண்டு எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்த வரவேற்பிற்கு பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை ரிங் ரோடு, திருமங்கலம் வழியாக சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதிக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகை தருகிறார். பொது கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாகசாலை மார்க்கமாக செல்லும் எடப்பாடியாருக்கு திருமங்கலம் மேலக்கோட்டை அருகே கழக அம்மா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மேளதாளம் முழங்கவும், பெண்கள் திரண்டு பூரண கும்ப மரியாதையுடனும், மலர் தூவியும் எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது,

அதனைத்தொடர்ந்து சிவரக்கோட்டை, கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் கழக அம்மா பேரவை சார்பில் கழக அம்மா பேரவை தொண்டர்கள் சீருடை அணிந்து எடப்பாடியாரை வரவேற்கின்றனர். பின்னர் மதுரை மாவட்ட எல்லை முடிவில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் விருதுநகர் மாவட்ட எல்லை அருகே முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது, அதனை தொடர்ந்து சிவகாசி எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் திருத்தங்கல் அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் காலை 10 மணி அளவில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் எழுச்சியுரை ஆற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பொதுமக்கள், கழக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரள்கின்றனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிறகு மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக சிவகாசியில் இருந்து புறப்பட்டு மதுரை பழங்காநத்தம் நடராஜ தியேட்டரில் அருகே வருகை தரும் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாம அங்கு மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

முன்னதாக பொதுக்கூட்ட மேடை அருகே மேளதாளங்கள் முழங்கவும், வாணவேடிக்கையுடன் கழக தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

இந்நிகழ்வின்போது பொதுக்கூட்ட மேடை அருகே மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஏற்பாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை எடப்பாடியாருக்கு அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக உருவாகிடும் வகையில் அயராது பாடுபடுவோம் என்று உறுதி மொழியை எடப்பாடியார் முன்னிலையில் ஏற்கின்றனர். பொதுகூட்டத்தை நிறைவு செய்த பின்னர் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதிக்கும், மதுரை பழங்காநத்தம் பகுதிக்கும் இன்று வருகை வரும் எடப்பாடியாரை வரவேற்பு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை கழகத்தினர் செய்து உள்ளனர்.