எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கழகத்தினர் பிரம்மாண்ட ஏற்பாடு

விருதுநகர்
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இன்று எடப்பாடியார் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டத்திற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கழகததினர் செய்து உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இன்று நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்டமான முமேடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. மேடை அமைக்கும் பணிகளை இரவு பகலாக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார்.
பொதுக்கூட்டம் காலை நேரம் என்பதால் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் கூலிங் மேடை அமைக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சிறப்பாக செய்திருக்கின்றது.
கூட்டத்திற்கு வரும் தரும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கழக நிர்வாகிகள் தொண்டர்கள் படை புடை சூழ மேடையில் வந்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உரை ஆற்றுகின்றார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்து வருகின்றார்.