தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

மதுரை,

மதுரை பழங்காநத்தம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆகிய இடங்களில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டங்களில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிபங்கேற்க உள்ளதையொட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்று தெரிவித்தார்.

மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள நடராஜர் தியேட்டர் அருகே இன்று விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணியை கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன்,

கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து மக்கள் பங்கேற்கும் இடத்தினையும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென் மாவட்ட மக்களின் இதய பகுதியாக திகழும் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்திற்கு அம்மா ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையும், விடியா திமுக அரசின் மக்களை வாட்டி வதைக்கும் மக்கள் விரோத நிர்வாக சீர்கேட்டையும் கண்டித்து எடப்பாடியார் தோலுரித்து காட்டுகிறார்,

இவ்வாறு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

இதன்பின்னர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்ட இடத்தை கழகப்பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர்

அதனைத்தொடர்ந்து கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை, பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை விருதுநகர் மாவட்டத்திற்கு அம்மா அரசு செய்துள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய மருத்துவக்கல்லூரியை எடப்பாடியார் வழங்கினார், அதேபோல் பட்டாசு தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்தார். நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்தில் பெரும் திரளாக மக்கள் பங்கேற்கின்றனர் என்று கூறினார்