விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைப்போம்

கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேட்டி
தூத்துக்குடி
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்தும் வாய்ப்பு வர வேண்டும். மக்கள் விரோத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்தி தர எல்லாம்வல்ல இறைவன் பேரருள் புரிய வேண்டும் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கூறி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க வேண்டி கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ.வுடன் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கம் எதிர்புறம் உள்ள ஹஜ்ரத் அப்துல் அலிம் தர்காவில் மலர்போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இதன்பின்னர் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விரைவில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்தக்கூடிய வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும்.
அதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமியை பதவியேற்க செய்து தமிழக மக்களுக்கு பொற்கால நல்லாட்சியை தரும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
அதேபோல் கழக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமியை பொதுச்செயலாளராக்கிட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் எல்லா வல்ல இறைவன் பேரருள் புரிய வேண்டி ஆன்மீக சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறேன் அதன் தொடர்ச்சியாக தற்போது கோவில்பட்டியில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளேன்.
இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் கூறினார்.