சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர்

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்ததி விடியா தி.மு.க. அரசை கண்டித்து இன்று 29-ந்தேதி
காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார் நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிகேசாமி பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.

இதற்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனைக்கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் தொகுதி வாரியாக நடைபெற்றது.

அதன்படி திருவில்லிபுத்தூில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

விடியா தி.மு.க அரசை கண்டித்து சிவகாசியில் நடைபெறும் இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

கண்டன பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக விருதுநகரிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக சிவகாசியிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தொண்டர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கூலிங் சீட் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கழகத்தில் உறுப்பினராக இருப்பதே பெருமை. அண்ணா திமுகவை அழிக்க கருணாநிதியும் முயற்சி செய்தார். அவரது மகன் ஸ்டாலினும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றார். அது நடக்கவே நடக்காது. அண்ணா திமுகவின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.

திமுகவின் இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் திமுக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

அதிமுகவின் செல்வாக்கு எடப்பாடியார் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆகையால் கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிவகாசி வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அண்ணா திமுகவின் எக்கு கோட்டையாகும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, இரட்டை இலை சின்னம், எடப்பாடியார் என அதிமுகவிற்கு விசுவாசமான தொண்டர்கள் இருக்கும்வரை அண்ணா திமுகவை யாராலும் அழிக்க முடியாது.

அண்ணா திமுக எங்கே இருக்கின்றதோ அங்கு நாம் இருப்போம். இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கின்றதோ அங்கு கட்சியினர் இருப்பார்கள். கட்சி இருக்கும் இடத்தில் தான் எடப்பாடியார் இருக்கின்றார்.

எடப்பாடியார் இருக்கும் இடத்தில் நாம் இருக்கின்றோம். அண்ணா திமுகவை இரட்டை இலை சின்னத்தை யார் காப்பாற்றுகின்றார்களோ அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டியது நமது கடமை.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் எடப்பாடியாரை திரண்டு வந்து திருவிழா போன்று வந்து வரவேற்க வேண்டும். கட்சிக்கு போஸ்டர் ஒட்டி வளர்ந்து வந்தவன் நான். அண்ணா திமுகவில் உழைப்பவன் பிழைப்பான்.

இதற்கு நானே அடையாளம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எடப்பாடியார் பெயரை கூறியவர்கள் வாழ்ந்ததாகத்தான் வரலாறு இருக்கும். இப்போது மக்கள் தங்களது பிரச்சினைகளை அதிமுகவினர்களிடம் மட்டுமே கூறுகின்றனர். ஏனென்றால் நம்மிடம் சொன்னால் சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் இன்றும் நம் மீது வைத்துள்ளனர்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.