மதுரையில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா நினைவுப்பரிசாக வெற்றிவேல் வழங்கினார்
மதுரை
மதுரை வருகை தந்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெற்றிவேலை நினைவுப்பரிசாக வழங்கி கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா வரவேற்றார்,
மதுரை, சிவகாசி பகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மதுரை விமான நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து சிவகாசி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையம் அருகே மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் எடப்பாடியாருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தும், பூங்கொத்து வழங்கப்பட்டது. எதிரிகளை சம்ஹாரம் செய்யும் வகையில் முருகப்பெருமானின் புனிதமான வேலை எடப்பாடியாருக்கு, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமா வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார். அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
இந்த வரவேற்பின் போது எடப்பாடியாரின் சாதனைகள் குறித்து பதாககைகளை கையில் ஏந்தியவாறு கழகத் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி எடப்பாடியார் இரட்டைவிரை காட்டி உற்சாகப்படுத்தினார்.