தற்போதைய செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு அரணாக விளங்குவது கழகம் மட்டுமே-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்

செங்கல்பட்டு,

ஏழை எளியவர்களுக்கு என்றென்றும் பாதுகாவலராகவும், அரணாகவும் விளங்குவது கழகம் மட்டுமே என்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கூறி உள்ளார்.

சிட்லபாக்கத்தில் வரதராஜ திரையரங்கம் அருகே அமைந்துள்ள அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள், கங்கையம்மன் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தாம்பரம் சானிடோரியம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுனர்கள் சுமார் 100 பேருக்கு எவர் சில்வர் பாத்திரங்களை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-

ஏழை எளியவர்களுக்கு என்றென்றும் பாதுகாவலராகவும், அரணாகவும் விளங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே. பதவிக்கு வந்தவுடன் அடித்தட்டு மக்களை ஏளனமாக பேசுவதும், அவர்களை அவமரியாதை செய்வதையும் கழகத்தில் காண முடியாது.

ஏனெனில் புரட்சித்தலைவர் அடித்தட்டு மக்களிடம் நேசமுடம் நடந்துகொள்வதை சினிமாவில் நடித்து காட்டியதை நிஜத்தில் நடைமுறைப்படுத்தி கழகத்தினருக்கு வழிகாட்டினார். இதயதெய்வம் அம்மா அவர்களும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மலரும் காலம் வெகு விரைவில் நடைபெறும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் இரா.மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.