தற்போதைய செய்திகள்

கழகத்தை அழிக்கவோ, வெல்லவோ உங்களால் எந்த காலத்திலும் முடியாது

ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி

சேலம்

ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது என்று ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து 1300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அம்மாவுடைய அரசில் நான் முதலமைச்சராக இருந்தபொழுது நான் ஏற்கனவே சொன்னேனே, கடுமையான வறட்சியை சந்தித்தோம், அதையும் முறியடித்தோம். அதே போல புயல் வந்தது, புயல் வேகத்தில் அந்த புயலின் அடிச்சுவடு இல்லாமல் அதை நிறைவேற்றிய அரசு அம்மாவுடைய அரசு.

வெள்ளம் வந்தபொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்து அந்த அடிச்சுவடு இல்லாமல் பார்த்துக் கொண்டோம். மக்கள் பாதிப்பு பார்த்துக்கொண்டோம், கொரோனா வைரஸ் தொற்று வந்தபொழுது தீண்டத்தகாதவர்கள் போல ஒதுங்கி போனார்கள்.

கொரோனோ வைரஸ் தொற்று நோய் எப்படி வந்தது என்று தெரியாது. அதேபோல நோய் வந்தவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூட மருத்துவர்களுக்குத் தெரியாது. மருந்து எப்படி கொடுக்கப்பட வேண்டும் என்று நிலையெல்லாம் தெரியாத காலத்திலேயே அம்மாவுடைய அரசு இன்றைக்கு உலக அளவிலே அந்த விடைகளை எல்லாம் பெற்று

, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று என்பதையெல்லாம் கண்டறிந்து, நம்முடைய மருத்துவர்களுக்கு உரிய முறையில் பயிற்சியை கொடுத்து அவர்களை தயார் படுத்தி கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்ட பொழுது விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம்.

மருத்துவ உள்கட்டமைப்பு இன்றைக்கு மருத்துவமனை ஆங்காங்கே ஆக்ஸிஜன் செய்து கொடுத்தோம். வென்டிலெட்டரை கொடுத்தோம் இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்த காரணத்தினால் கழக அரசு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கொரோனா வைரஸ் தொற்று இருந்த காலகட்டத்தில் மக்கள் வயிறார உண்ண மூன்று வேளையும் ஏழு லட்சம் பேருக்கு உணவளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தங்குதடை இல்லாமல் விலையில்லாமல் கொடுத்து அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். கண்ணை இமைகள் காப்பது போல மக்களை காத்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.