தற்போதைய செய்திகள்

அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர்-சிறுணியம் பி.பலராமன் பேச்சு

திருவள்ளூர்

திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொன்விழா ஆண்டை முன்னிட்டு பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சியில் நல திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.ஆரணி பேரூர் கழக செயலாளர் தயாளன், சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ், மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார், மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் வெங்கட்ரமணா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானுப்பிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குணபூபதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாஜா ஜனார்த்தனன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்,பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாத், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மீஞ்சூர் பேருர் கழக செயலாளர் பட்டாபிராமன்,கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் ரவி, ஊத்துக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேக் தாவூத், பொன்னேரி முன்னாள் நகர மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் 2 ஆயிரம் ஏழை தாய்மார்களுக்கு இலவச சேலை, நலிவடைந்த குடும்பப் பெண்களுக்கு 50 இலவச தையல் மெஷின், நலிந்த கழக நிர்வாகிகளுக்கு 50 இலவச இஸ்திரிபெட்டி, மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு 500 வேட்டி ஆகியவை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் ஆரணி பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் கே.என்.சீனிவாசன் நன்றி உரையாற்றினார்.திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், தலைமை கழக பேச்சாளர்கள் குழந்தைசாமி, பஞ்சாட்சரம், அமரநாதன், ஆகியோர் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் பேசியதாவது:-

அக்டோபர் 17ஆம் தேதி தமிழக மக்களா மறக்க முடியாத நாளாக உள்ளது ஏனென்றால் இந்த நல்ல நாளில் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நமது கழகத்தினை துவங்கினார்.அதேபோல் புதுக்கட்சியை துவங்கிய ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டும்தான். இதுவரை நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தை 32 ஆண்டுகள் ஆட்சி செய்தது. எந்த ஒரு மாநில கட்சியும் செய்ய முடியாத வரலாற்று சாதனை.அந்த சாதனையை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாவும் செய்துள்ளார்கள்.புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் புரட்சித்தலைவி அம்மாவும் தமிழக மக்களுக்கு பல சரித்திர சாதனைகள் படைக்கும் வகையில் பல திட்டங்களை தந்து இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள். அதிலும் குறிப்பாக புரட்சித் தலைவி அம்மாவின் தொட்டில் குழந்தை திட்டம் ஐநா சபையே புரட்சித்தலைவி அம்மாவை பாராட்டியது.அதேபோல ஒரு குடும்பத்தில் ஒரு பெண் முன்னேறினால் அந்தக் குடும்பமே முன்னேறும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை வழங்கினார். பள்ளி படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, லேப்டாப், மானிய விலையில் இருசக்கர வாகனம், உயர் படிப்பை படித்து முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை 50 ஆயிரம், உயர் படிப்பை முடிக்காத பெண்கள் திருமண உதவித்தொகை ரூ 25 ஆயிரம் மற்றும் பேரூகால உதவி திட்டம் உள்ளிட்டவை தந்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரே முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மட்டும்தான். தாலிக்கு தங்கம் ஒரு சவரன் திட்டம் விலையில்லா கறவை மாடுகள் ஆடு கோழி வளர்ப்பு என பெண் சமுதாயம் வளர பல திட்டங்களை தீட்டினார் புரட்சித்தலைவி அம்மா.

ஸ்டாலின் அவரது அமைச்சர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சர்களால் ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால் என்ன பிரச்சனை வருமோ என்று நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று அவர் பொது வெளியில் பேசி இருப்பது தமிழக மக்கள் அவரை எப்படி ஒரு முதலமைச்சராக ஸ்டாலினை ஏற்பார்கள் இதுதான் ஒரு முதல்அமைச்சருக்கு அழகா? திமுக ஆட்சியில் எந்தத் துறைகளும் சரியாக நடக்கவில்லை. காரணம் அவர் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருப்பதால் அதிகாரிகள் யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் அரசுப் பணிகளில் மெத்தனப் போக்கு காட்டுகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டது. திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா கழகஆட்சியில் இதுபோன்று யாராவது ஒருவர் பேசியிருப்பார்களா. நாம் இதுவரை கேட்டது உண்டா? அப்படி யாராவது பேசியிருந்தால் புரட்சித்தலைவி அம்மா அவரை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.ஆனால் இன்றைக்கு திமுக தலைவர் ஸ்டாலினால் சபை நாகரிகம் தெரியாமல் பேசும் அமைச்சர்களை கட்சியிலிருந்து நீக்க முடியுமா. அவரால் செய்ய முடியாது ஏனென்றால் ஸ்டாலின் நிர்வாக திறமையற்ற முதல்வர். ஏன் அமைச்சர்கள் ஸ்டாலினை மதிக்கவில்லை. என்றால் ஸ்டாலின் தனது குடும்பம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார் அதனால் எந்த ஒரு அமைச்சரும் ஸ்டாலினை மதிப்பதில்லை.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி இல்லை சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் கழகம் வென்று கழகம் ஆட்சியைப் பிடித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் அறியணையில் அமர்த்துவோம். கழக ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் நடராஜன்,கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இமயம் மனோஜ்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திருமலை, இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தேவராஜ்,மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சியாமளா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கடப்பாக்கம் ராஜா,மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளர் வெங்கடேசன், ஆரணி பேரூர் கழக துணை செயலாளர் சந்தான லட்சுமி ,மீஞ்சூர் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வழகி எர்ணாவூரான், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யுவராஜ், மற்றும் மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் கழக,கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.