மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் 25,000 இளைஞர்கள் கழகத்தில் ஐக்கியம் – மீண்டும் ஈரிலை ஆட்சி அமைய பாடுபட போவதாக சூளுரை

மதுரை
பேரறிஞர் அண்ணா வழியில் வந்த இளைய சமுதாயம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் ஜல்லிக்கட்டு காளைகளாக தங்களை கழகத்தில் அர்ப்பணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற பாடல் வரிக்கேற்ப ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் கழகத்தை கட்டிக் காத்து வரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். 2001ம் ஆண்டு முதல் விலையில்லா சைக்கிள் திட்டம், பாடநூல் திட்டம் என்று ஒவ்வொரு திட்டங்களும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைக்க வழி செய்தார். மேலும் இன்றைக்கு அம்மாவின் மடிகணினி திட்டத்தால் ஏறத்தாழ இந்த பத்தாண்டுகளில் மட்டும் 65 லட்சம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, இந்த இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை சேர்த்து கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற அடிப்படையில் கழகத்தில் தான், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கினார். அதில் 36 லட்சம் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர் அதன் தொடர்ச்சியாக அம்மா பேரவை, இளைஞர் அணி, இளைஞர் பாசறை ஆகிய அணிகள் சார்பாக புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கழகத்திற்கு தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். குறிப்பாக இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட பொழுது இந்த பத்தாண்டுகளில் இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பினை அம்மா அவர்கள் உருவாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்றைக்கு முதல்வரும் உருவாக்கியுள்ளார் என்பதை பல்வேறு அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக புரட்சி அம்மா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2,42,160 கோடி முதலீட்டை ஈர்த்து அதன்மூலம் 4,70,065 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார். தற்போது இதில் ரூ. 73,711 கோடி மூதலீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு 1,86,838 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதலமைச்சர் இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ம் ஆண்டு நடத்தி அதில் 3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து அதன்மூலம் 10.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கினார். அதில் 27 திட்டங்கள் துவங்கப்பட்டு 1,10,844 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த 22 மாதத்தில் மட்டும் ரூ.60,905 கோடி மூதலீட்டை ஈர்த்து 1,60,349 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை இன்றைக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவில் வேலைவாய்ப்பினை உருவாக்கித்தரும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாது இன்றைக்கு கிராமப்புற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கும் வண்ணம் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அதன்மூலம் இன்றைக்கு 313 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பு படிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாது அந்த மாணவர்கள் படிப்பு மற்றும் இதர செலவுகளை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டது ஒட்டுமொத்த இளைஞர்களை ஈர்த்து உள்ளது.
குறிப்பாக கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் முதலமைச்சரை தங்கள் ரோல்மாடலாக நினைத்து செயல்படுகின்றனர். ஏனென்றால் முதலமைச்சரும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்றைக்கு மற்ற மாநிலங்களில் எல்லாம் வழிகாட்டும் வகையில் திகழ்கிறார். இவரை நான் பின்பற்றினாலே போதும் நாமும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வரலாம் என்று இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு தமிழகம் முழுவதும் இளைஞரணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் திருப்பரங்குன்றம் ஒன்றியம், அவனியாபுரம் கிழக்குபகுதி கழகம், அவனியாபுரம் மேற்கு பகுதி கழகம், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி கழகம், திருப்பரங்குன்றம் மேற்கு பகுதி கழகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்களில் ஏறத்தாழ 12,000 இளைஞர்கள் தங்களை கழகத்தின் உறுப்பினராக சேர்த்து கொண்டனர்.
அதேபோல் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு தெற்கு ஒன்றியம், மதுரை கிழக்கு வடக்கு ஒன்றியம், மதுரை மேற்கு வடக்கு ஒன்றியம், வண்டியூர் பகுதி கழகம், திருப்பாவை பகுதி கழகம், ஆனையூர் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் ஏறத்தாழ 7,500 இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அதேபோல் மேலூர் தொகுதியில் உள்ள மேலூர் வடக்கு ஒன்றியம், மேலூர் தெற்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றியம், மேலூர் நகர கழகம், வல்லாளபட்டி பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையில் 6,500 இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
ஆக மொத்தம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் ஏறத்தாழ 25,000 இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வாழ்த்துகளை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மேலூர் பெரியசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், அம்பலம், ஆர்.முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் நிலையூர் முருகன், தக்கார்பாண்டி, கார்சேரி கணேசன், பொன்னுசாமி, பொன் ராஜேந்திரன்,குலோத்துங்கன், வாசு (எ) பெரியண்ணன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், ஜீவானந்தம், கோபி, முருகேசன், பன்னீர்செல்வம், நகர செயலாளர் பாஸ்கரன் மாவட்டஅணி நிர்வாகிகள் ஓம்.கே.சந்திரன், சண்முகபிரியா, முத்துகிருஷ்ணன், வக்கீல் சேதுராமன், கருத்த கண்ணன், பள்ளப்பட்டி முருகேசன், கள்ளந்திரி சேகர், மோகன்தாஸ், ஜெயபால், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன்,தனம்போஸ்,ஜெயராமச்சந்திரன் மற்றும் புருஷோத்தமன் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கழகத்தில் இணைந்து கொண்ட இளைஞர்கள் கூறியதாவது:-
எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ரோல்மாடலாக முதலமைச்சர் திகழ்கிறார். ஏனென்றால் இன்றைக்கு எங்களைப் போன்ற இளைய சமுதாயம் வருங்காலத்தில் நலமுடன் வாழ வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அளித்து வருகிறார்.
குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது அந்த வேலைவாய்ப்பினை எங்களுக்கு உருவாக்கி தந்து இதன் மூலம் எங்கள் குடும்பத்திற்கும் வளமான வாழ்க்கையை அளித்த மட்டுமல்லாது எங்களைப் போன்ற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கனவாய் இருந்த மருத்துவ படிப்பை இன்றைக்கு உள் ஒதுக்கீடு மூலம் நிறைவேற்று தந்துள்ளார்.
இன்றைக்கு திமுக எடுத்துக்கொண்டால் அது குடும்ப கட்சியாக உள்ளது எங்களை போன்ற இளைஞர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள். அதேபோல் இன்றைக்கு நடிகர்கள் பலர் கட்சியை தொடங்க வந்துள்ளனர் அவர்கள் நடிக்கும்போது எங்களை போன்ற இளைஞர்களுக்கு எந்த வழிகாட்டலும் வழங்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒரு சிறந்த ஆட்சியை அம்மாவின் அரசு சிறப்பாக திட்டங்களை செய்து வருகிறது இந்தத் திட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் ஆகவே இன்றைக்கு நாங்கள் இந்த இயக்கத்தில் இணைந்து உள்ளோம் வரும் தேர்தலில் முதலமைச்சர் சாதனைகளை எடுத்துக்கூறி 2021 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற எங்கள் பணி மகத்தான இருக்கும் என்று நாங்கள் சூளுரை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினர்.