தற்போதைய செய்திகள்

தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை

தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்தும் தி.மு.க. மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்றும் தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.கழக அமைப்பு தேர்தல் குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் உள்ள குண்ணத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எழுச்சியோடு இருக்கிறது. தி.மு.க.வோ தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்துகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய தவறியதால் தி.மு.க. அரசு மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

திமுக அரசு எந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. முதியோர் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அதை திரும்பவும் செயல்படுத்தி வருகின்றனர்.
கழக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வுவூதியம் வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலின்போது முதியோர் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறிய தி.மு.க.வினர் அதை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
எனவே தி.மு.க.வின் மாயத்தோற்றத்தை மக்களிடத்தில் தோலுரித்து காட்டுவோம். வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு அழகல்ல. தமிழகத்தை ஆள தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் தான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திருச்சி முன்னாள் துணைமேயர் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், முருகேசன் செல்லம்பட்டி ராஜா, காளிதாஸ், கொரியர் கணேசன், நகர செயலாளர் விஜயன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழழகன், பாஸ்கரன், வக்கீல் தமிழ்ச்செல்வன், மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகரன், சுமதி சாமிநாதன் மற்றும் சேர்மன் பாவாடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பேசுகையில், தமிழகத்தின் மிகப்பெரிய இயக்கம் கழகம். 2 கோடி தொண்டர்கள் உள்ள கழகத்தை ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். இந்த ஏழு மாத கால தி.மு.க ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. தி.மு.க ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் பேசுகையில், இன்றைக்கு நமது இயக்கத்தை தொண்டர்களாக இருந்து தங்கள் உழைப்பால் இருந்து இன்றைக்கு கழகத்தை கழக ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்கள் என்றார்.