தற்போதைய செய்திகள் மற்றவை

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் கடும் தாக்கு

அம்பத்தூர்

கழக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறி உள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது கூட்டத்திற்கு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திண்டு உத்தமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முகப்பேர் பாலன், பொருளாளர் காமராஜ் நகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் அம்மா அவர்களின் சாதனைகளையும், கழக ஒருங்கிணைப்பாளர்களின் நான்காண்டு கால மக்கள் நலத்திட்டங்களையும் கூறி வாக்குகள் சேகரித்தோம். ஆனால் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளனர்.

இந்த ஆறுமாத காலத்தில் பல்வேறு பணிகளை செய்தோம் எனவும் முதன்மை முதலமைச்சர் எனவும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் ஆறு மாத காலத்தில் பாலங்கள் கட்ட முடியுமா, மருத்துவக்கல்லூரிகள் கட்ட முடியுமா, பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற முடியுமா, எந்த ஒரு மக்கள் பணியும் செய்ய முடியுமா? செய்தது எல்லாமே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த அம்மாவின் ஆட்சி காலத்தில் தான்.

ஆனால் இன்று அத்தனை திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் இயக்கமாக தி.மு.க செயல்படுகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்து செல்ல பாடுபடுவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் பேசினார்.
இக்கூட்டத்தில் பகுதி கழக செயலாளர்கள் கே.பி.முகுந்தன் ஜெ.ஜான், சி.வி.மணி, ஆர்.சி.தீனதயாளன், கோலடி மலேந்திரன், எம்.டிமைக்கேல்ராஜ், எல்.என்.சரவணன், வக்கீல் டி.அறிவரசன், எஸ்.டேவிட்ராஜன், ஐ.டி.அரசன், வனிதா சாக்ரடிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.