தற்போதைய செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பீர்

சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு

செங்கல்பட்டு,

தி.மு.க. அரசை கண்டித்து 17-ந்தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி 168-வது வட்டத்தில் வட்ட கழக செயலாளர் உள்ளகரம் பா.ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் கே.பி.கந்தன் ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-


தமிழகத்தில் சிறப்பானதொரு நல்லாட்சியை கழகம் வழங்கி வந்தது. ஆனால் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்ற தி.மு.க. அரசு தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறது. நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதால் மாணவர்கள், மகளிர் உட்பட பல்வேறு தரப்பினர் தி.மு.க. அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசை கண்டித்து வருகின்ற 17-ந்தேதி அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் அலைகடலென திரண்டு வாரீர்.


இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார்.

இக்கூட்டத்தில் பகுதி கழக செயலாளர் வி.குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எஸ்.எம்.தனசேகர், கழக நிர்வாகிகள் ஜெ.பத்மநாபன், வி.வீராசிங், பி.எஸ்.மோகன், டி.எஸ்.பாலாஜி, டி.எஸ்.பக்தவச்சலம், சாந்தப்பன், ஏழுமலை, ஹரிஷ், பி.லட்சுமணன், கலா, லட்சுமி, ஏ.கல்யாணராமன், மல்லிகா, ஆறுமுகம், வாசு, முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.