பொய் வழக்கு போடும் தி.மு.க அரசுக்கு கண்டனம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம்
திருவண்ணாமலை
கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழக அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் வந்தவாசி அடுத்த வாரம் வீரம்பாக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இக்கூட்டத்தின் போது கழக அமைப்பு தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி கே.பழனிசாமி கழக இணை ஒருங்கிணைப்பாளராக ஏகமனதாக தேர்வு செய்ததை வரவேற்கிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து 17-ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.