தற்போதைய செய்திகள்

கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் – முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி.ராமச்சந்திரன் வழங்கினர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் ஒன்றியங்களுக்குட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் நடத்தினர்.

இதையொட்டி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவங்களை தேர்தல் பொறுப்பாளர்களான கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கினர். இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜூனன், சக்கரபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட துணை செயலாளர் செல்வன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, திருவண்ணாமலை நகர கழக செயலாளர் ஜெ.செல்வம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பழகன்,

பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சுனில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பர்வதம், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் குருவிமலை கார்த்திகேயன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் தரணிதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன்,
ஒன்றிய கழக செயலாளர்கள் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்,

கோவிந்தராஜ், டி.ஜானகிராமன், ராஜா (எ) தேவராஜன்,
ஆர்.பாஷ்யம், சி.தொப்பளான், எம்.கலியபெருமாள், ஏ.ஏ.ராமச்சந்திரன், கே.சரவணன், மகரிஷி சி.மனோகரன், அருணாச்சலம், எம்.சி.அசோக், வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர், ஜெயபிரகாஷ், பேரூராட்சி கழக செயலாளர்கள் செல்வமணி ஓ.சி.முருகன், எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஜி.பாண்டுரங்கன், ஆனந்தன், பஞ்சாட்சரம் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கழக பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.