கோவை பச்சாபாளையத்தில் நலத்திட்ட உதவிகள்-கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ வழங்கினார்

கோவை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பச்சாபாளையம் ஆவின் அருகே கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி வழிகாட்டுதலின் படி மாநில ஆவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஆவின் கோவை மண்டல செயலாளர் ஆவின் எஸ்.முருகன் தலைமையில் தொழிற்சங்க கொடியேற்றி விழா நடைபெற்றது.
இதில் கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், இனிப்புகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் பாபு, ரவீந்திரன், கனகராஜ், ஒன்றிய அம்மா பேரவை இணைச்செயலாளர் பிரசாத், கன்மலை முருகேசன்,வார்டு கழக செயலாளர் ரவி நடராஜ், ஆவின் மாநில துணைச்செயலாளர் டி.ஜெகநாதன்,
துணைத்தலைவர்கள் தேவராஜ், விஜயகுமார், இணைச்செயலாளர் ஜெய் கிருஷ்ணன் துணைச்செயலாளர் தடாகம் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் சிவானந்தம், கருப்புசாமி, பக்தவச்சலம், கருப்புசாமி, கோபால், சரவணன், காளிதாஸ் மற்றும் கிளை கழக செயலாளர் ரவி, கவுன்சிலர்கள் சிவகுமார், நந்தகோபால், மகளிர் அணி ராஜாமணி, பூவாத்தாள், லட்சுமி, பழனியம்மாள், சுதா, பரிமளா, மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.