கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவை,
கோவையில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரத்தில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக இணை செயலாளர் எஸ்.மணிமேகலை, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆட்டோ எஸ்.ஜே.அசோக்குமார், கட்டுமான தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கே.வி.ஆறுமுகம், கேசி.வேலுச்சாமி, முருகேசன், ஆவின் மண்டல செயலாளர் ஆவின் எஸ்.முருகன், பகுதி செயலாளர் லாலி ரோடு விஜய், வார்டு செயலாளர்கள் குஞ்சாலி, பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.