அரசின் சாதனைகளை விளக்கி பாசறை நிர்வாகிகள் பரப்புரை – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள்

சென்னை
அரசின் சாதனைகளை விளக்கி பாசறை நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி 41-வது (வடக்கு) வட்டம் அஜீஸ்நகர், குமரன் நகர், அம்மன் கோவில் தெரு, 40-வது வட்டம் இளையமுதலி தெரு, பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மன்றங்களை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், தொடங்கி வைத்து கழக கொடியை ஏற்றி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், 1000 பேருக்கு அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-
கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகர் மீனாம்பாள் நகர், கொடுங்கையூர், எழில் நகர் காசிமேடு, புது வண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பி.வி.காலனி, எம்.கே.பி.நகர்,பகுதிகள் உள்பட 100 பாசறை மன்றங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் கழகம் மிகவும் எழுச்சி பெற்றுள்ளது.
மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் சேவையாற்றுவதே வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் லட்சியம். இதே லட்சியத்துடன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து அதனை தீர்க்கும் வகையில் கழகத்தினருடன் இனைந்து திறந்த மனதுடன் கட்சி பணியாற்ற வேண்டும். மேலும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பரப்புரையை பாசறையினர் மேற்கொள்ள வேண்டும். வீடு,வீடாக சென்று அரசின் திட்டங்களை எடுத்துரைத்து திமுக.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து
கழக நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
முறைப்படி கிராம சபை கூட்டம் என்பது வருவாய்த்துறையின் கீழ் அதிகாரிகள் மேற்க்கொள்ளும் பணிகள். அவைகளை கிண்டலடிக்கும் விதமாக மக்களிடத்தில் தி.மு.க.வினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் நாம் கழக அரசு தமிழக மக்களுக்கு செய்த சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்கிறோம். வருகின்ற 2021 தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.
இவ்வாறு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.
முன்னதாக சிறப்பாக மக்கள் பணியாற்றியதற்காக மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேசுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.