தமிழர் நலனுக்காக கழகம் தொடர்ந்து பாடுபடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னை
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும், அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன்.
தமிழர் நலனுக்காகவும் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற
கழகம் தொடர்ந்து பாடுபடும் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.