சிறப்பு செய்திகள்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை

தாய் மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அந்நிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் அரசி, இறுதிவரை தாய் மண்ணை காக்க தளராது போராடி, வீரத்தின் அடையாளமாய் திகழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பானிசாமி தெரிவித்துள்ளார்.