சிறப்பு செய்திகள்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை,

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 2000 அம்மா மினி கிளிக்குகளை கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த மினி கிளினிக்குகளில் கடந்த கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள விடியா தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக அரசின் திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்கி வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள அம்மா அம்மா பல்கலைக்கழகம் முடக்கப்பட்டது. அதன்பின்னர் அம்மா உணவகங்களில் உள்ள அம்மா அவர்களின் திருவுருவ படத்தை அகற்றி விட்டு பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இதன் பின்னர் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 ஆயிரம் மினி கிளினிக்குகளை மூட தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பதாக அறிந்து அவற்றை மூடக்கூடாது என்று கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி அந்த முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டமாக கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட வரும் 2000 மினி கிளினிக்குகள் மூடப்படும் என்று நேற்று காலை விடியா அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து மினி கிளினிக்குகள் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது.

சேலத்தை அடுத்த ெசட்டிச்சாவடி பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் செட்டிச்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

2000 அம்மா மினி கிளினிக்குகள் முன்னிறிப்பின்றி மூடப்பட்டதற்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகர பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி

இதேபோல் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகத்தின் கடந்த ஆட்சியில், ஏழை, எளிய மக்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே உடனடி முதலுதவி மற்றும் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, மருத்துவ சேவையில் தமிழகம் பின்னோக்கி செல்வதையே காட்டுகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதால் அவசர உதவி மற்றும் உடனடி சிகிச்சை கிடைக்காமல் மக்கள் பெரிதும் துன்பப்படுவார்கள். கழகத்தின் கடந்த ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்து வந்த தமிழகம் தற்போது பின்னோக்கி செல்வது கண்கூடாக தெரிகிறது. மக்கள் உடனடி சிகிச்சை பெறும் சீரிய முயற்சியான அம்மா மினி கிளினிக்குகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.