தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி

வேலூர்

3 மாத சமப்ளம், ஊக்கத்தொகை வழங்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் வேலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்து பயிற்சி மருத்துவர்களாக சுமார் 104 பேர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் கொரோனா வார்டு உட்பட பல பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சி மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் ஊதியம் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை மேலும், கொரோனா காலத்தில் பணி செய்ததற்கு ஊக்கத்தொதையும் வழங்கப்படவில்லை .

இது தொடர்பாக பல முறை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து 3 மாத சம்பளம் வழங்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்து நேற்று 104 பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மாதம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும், 3 மாத ஊதியம் வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவதாக கூறி தொடர் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சி மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் வேலூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.