தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை,
தேவகோட்டை நகராட்சியில் ஆளும் தி.மு.க.வினரின் செய்த சதி திட்டத்தை முறியடித்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வாடுகள் உள்ளன. இங்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் கழக வேட்பாளர்கள், மற்றும் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். ஆனாலும் இந்த நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றுவதை தடுக்க ஆளும் தி.மு.க.வினர் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டனர்.
எனவே கழக கவுன்சிலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் மறைமுக தேர்தலை போலீஸ் பாதுகாப்புடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
ஆளும் தி.மு.க.வினரின் தன் அதிகாரத்தை பயன்படுத்தினர். இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி அசோக்
குமார் நேற்று காலையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் தேர்தல் நடைபெறுவது தாமதம் ஆனது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிஆர்.செந்தில்நாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் காரணமாக மாற்று தேர்தல் அதிகாரியாக தேவகோட்டை நகராட்சி பொறியாளர் மதுசூதனனை வைத்து தேர்தலை நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு மதியம் 1 மணியளவில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு கழக கவுன்சிலர் சுந்தரலிங்கம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல் துணைத்தலைவர் பதவிக்கும் கழக கவுன்சிலர் ரமேஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் தி.மு.க.வினரின் சதி திட்டத்தை முறியடித்து தேவகோட்டை நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கழக கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.